×

அரசு ஆவணங்களில் இறந்தவரின் கைரேகையை பயன்படுத்திய 2 பேருக்கு சிறை

புதுடெல்லி: டெல்லியில் கட்டிட கலைஞராக பணிபுரிபவர் சரன் சிங் சோலாங்கி. இவர் கட்டிட திட்டத்திற்கான அறிக்கையை டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதில் இறந்த நபரின் கட்டை விரல் ரேகையை பதிவு செய்து கட்டிட திட்ட ஒப்புதலுக்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்பித்துள்ளார். இது போலி என்பது பின்னர் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கட்டிட கலைஞர் சரண் சிங் சோலாங்கி மற்றும் அவரது கூட்டாளிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

The post அரசு ஆவணங்களில் இறந்தவரின் கைரேகையை பயன்படுத்திய 2 பேருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Saran Singh Solangi ,Delhi ,Delhi Development Authority ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி